Ethirneechal: திருமணம் வேண்டாம் என்ற தர்ஷன்! சுயரூபத்தை காட்டிய குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை தர்ஷன் தனது திருமணத்தினால் ஏற்படும் பின் விளைவு குறித்து யோசிக்காமல் திருமணத்திற்கு சம்மதம் கூறிய நிலையில், தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் முடங்கி இருந்த பெண்கள் தற்போது குணசேகரன் சம்மதத்துடன் ஹோட்டல் தொழில் உச்சத்திற்கு செல்கின்றனர்.
தர்ஷன் தனது பரீட்சையை முடித்த நிலையில், தைரியமாக தனது சித்தப்பாவிடம் அன்புக்கரசி தனக்கு வேண்டாம்... திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த விடயம் குணசேகரனுக்கு தெரியவரவே தர்ஷனை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் தர்ஷனை கதிரிடம் ஒப்படைத்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க கூறியுள்ளார்.
ஈஸ்வரி தான் பெற்ற பிள்ளை அடிவாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றார். இதுவரை சாதுவாக இருந்த ஆண்கள் தற்போது மீண்டும் மூர்க்க கோபத்திற்கு மாறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |