Ethirneechal: ஜனனியை பழிவாங்க குணசேகரனின் அடுத்த சதி... கொந்தளிக்கும் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை பழிவாங்க குணசேகரன் அடுத்த சதியை ஆரம்பித்துள்ள நிலையில், வீட்டிற்கு வந்த சிலர் ஜனனிக்கு தொல்லை கொடுக்கின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் தற்போது தனது மாமியார் விசாலாட்சிக்காக வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.
ஜனனியை தவிர மற்ற மருமகள்கள் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்துவரும் நிலையில், ஜனனியை பழிவாங்க குணசேகரன் இறங்கியுள்ளார்.
அடுத்தடுத்து பல சதி வேலைகளை செய்து ஜனனியின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திய குணசேகரன் தற்போது அடுத்த பிளான் ஒன்றினை போட்டுள்ளார்.
அதாவது வெளியிலிருந்து சிலரை வரவழைத்து ஜனனியிடம் சண்டையிட வைத்துள்ளார். இத்தருணத்தில் வெளியே சென்ற சக்தி உட்பட பலரும் வீட்டுக்கு வந்துள்ளனர்.
ஜனனியும் செய்வதறியாமல் தவித்து வருகின்றார். ஏற்கனவே ஜனனி கூறிய ஒற்றை வார்த்தையால் தான் குணசேகரனின் பரோலை ரத்து செய்யாமல் நீதிபதி இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
