Ethirneechal: பாத்ரூமில் குணசேகரனுக்கு விழுந்த அடி.... ஜனனியிடம் கொத்தாக மாட்டிய தருணம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பாத்ரூமிற்கு செல்லும் பைப்பை அடைத்து வைத்துவிட்டு நாடகமாடியதை ஜனனி கண்டுபிடித்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி போராடிய நிலையில், தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
தம்பிகளை வைத்து குணசேகரன் வீட்டு மருமகள்களை பிரிக்க பிளான் போட்டுள்ள நிலையில், மீண்டும் பெண்களை சமையலறையில் அடைத்து ஆள்கின்றனர்.
இதில் ஜனனி மட்டும் தனது வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், இதனை தனது தாயின் உதவியுடன் குணசேகரன் அடக்கி வருகின்றார்.
தற்போது பாத்ரூமிற்கு வரும் தண்ணீர் குழாயை அடைத்துவைத்துவிட்டு குணசேகரன் நாடகம் ஆடியுள்ளார். இதனை ஜனனி கண்டுபிடித்துள்ளார். இதுவரை குணசேகரனின் பிளானை அறியாத மருமகள்கள் தற்போது சுயரூபம் தெரிந்தால் எப்படி முடிவெடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |