தெரியாமல் நஞ்சை விதைத்த குணசேகரன்- பழிவாங்க துடிக்கும் தேவகி வாரிசு.. சூடுபிடிக்கும் சீரியல்
தன்னை அறியாமல் சிறுவயதிலேயே ஒரு நஞ்சை குணசேகரன் வளர்த்து விடுகிறார் என்ற ரகசியம் சக்திக்கும் குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
வீட்டிற்கு வாழ வந்த பெண்களை அடக்கி ஆழ நினைத்த குணசேகரன் அதற்காக பல வேலைபாடுகளை செய்து வந்தார். அவருக்கு அவரின் தம்பிகளும் அம்மாவும் துணையாக இருக்கிறார்கள்.
ஒரு சமயத்தில் மருமகள்களை அடக்க முடியாத குணசேகரன் மனமுடைந்த வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது பொங்கி எழுது அடுத்தடுத்து புதுபுது திருப்பங்களை கொடுத்து வருகிறார்.

மற்றொரு புறம் ஜனனி குணசேகரன் கொடுத்த கெடு முடிவதற்குள் வீடியோ ஆதாரத்தினைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேலையினை பார்த்து வருகின்றார். மாடியில் வீட்டு பெண்கள் அனைவரும் இருந்து திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜனனி பேசியதை கரிகாலன் கேட்டு விடுகிறார்.
அதனை குணசேகரனிடம் கேட்க ஓடிய பொழுது தலையில் அடிப்பட்டு ஆதிரையை பற்றிய ஞாபகங்கள் வந்து விடுகிறது.
பறிதாபமாக உயிரிழக்கும் தேவகி
இந்த நிலையில், குணசேகரன் 30 வருடங்களுக்கு முன்னர் செய்த கொலை பற்றிய விவரங்களையும் தேவகி யார் என்பதையும் சக்தி தெரிந்து கொள்கிறார்.

சொத்திற்காக தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவியையும், அவருடைய பிள்ளையையும் குணசேகரன் கொலைச் செய்ய முயற்சிக்கிறார். இவர்களில் அம்மா மாத்திரம் இறந்து விடுகிறார்.
ஆனால் தன்னுடைய அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய குணசேகரன் குடும்பத்தினரை பழிவாங்குவதற்காக குணசேகரனின் தம்பியொருவர் காத்திருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |