Ethirneechal: வாயிஸ் மெசேஜ் அனுப்பிய ஈஸ்வரி.. ஜனனியை எச்சரிக்கும் ஜீவானந்தம்
கண்விழித்த ஈஸ்வரி, “தன்னுடைய இந்த நிலைக்கு குணசேகரன் தான் காரணம்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த நிலைக்கு செல்வதற்கு அவருடைய கணவர் குணசேகரன் தான் காரணம் என வீட்டிலுள்ள பெண்கள் கூறுகிறார்கள். இதற்கான ஆதாரம் வீட்டில் வந்து அதிகாரமாக உரிமை கொண்டாடும் அறிவுக்கரசியிடம் இருக்கிறது.
ஆனால் ஈஸ்வரி கொலை முயற்சி வழக்கில் ஜனனியை சிக்க வைப்பதற்காக வீட்டில் சதி நடந்து கொண்டிருக்கிறது.
பணப்பலத்தை காட்டும் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி இருவரும் புதிதாக அதிகாரியொருவரை கொண்டு வருகிறார்கள். அவர், உண்மையை கண்டுபிடிக்காமல் ஜனனியை எப்படி சிக்க வைக்கலாம் என ஆதாரம் சேகரிக்கிறார்.
அறிவுக்கரசி ஏற்பாட்டில் வரும் புதிய அதிகாரி
இந்த நிலையில் மருத்துவமனையில் கண்விழித்த ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு கோல் செய்து,“ தன்னுடைய இந்த நிலைக்கு குணசேகரன் தான் காரணம்..” என்ற உண்மையை கூறி விடுகிறார். இந்த விடயத்தை நடக்கும் பொழுது பார்கவியும் பக்கத்தில் நிற்கிறார்.
ஈஸ்வரி வழக்கில் ஆதாரங்களை சேகரிக்குமாறு ஜீவானந்தம் கோல் செய்து ஜனனியிடம் கூறகிறார்.

Siragadikka Aasai: கெத்து காட்டிய சிட்டி ஆட்களை புரட்டி எடுத்த முத்து... மனோஜால் தூங்காமல் தவித்த தெருநாய்
இப்படி இருக்கும் பட்சத்தில் அறிவுக்கரசியிடம் பணம் வாங்கிய அதிகாரி ஜனனியை பார்ப்பதற்காக குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |