Ethirneechal: அறிவுக்கரசிக்கு ஜனனி கொடுத்த பதிலடி.... கோபத்தில் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தர்ஷனுக்கு அன்புவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துவரும் நிலையில், ஈஸ்வரி தனது மகனுக்கு பார்கவியை திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
ஒரு கட்டத்தில் பார்கவியின் தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஞானம் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.
பெண்களும் குணசேகரனுக்கு எதிராக கிளம்பிவரும் நிலையில், தற்போது திருமணத்தில் ஒரு உயிர் பலியாகும் என்று கூறப்படுகின்றது.
பார்கவியை திருமணம் செய்து வைக்க ஈஸ்வரி முயற்சிக்கும் நிலையில், குணசேகரன் அன்புவைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று தர்ஷனை மிரட்டி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |