Ethirneechal: மருத்துவமனைக்கு வந்த ஜீவானந்தம்... தர்ஷினியின் பரிதாபநிலை
எதிர்நீச்சல் சீரியலில் மருத்துவமனைக்கு ஜீவானந்தம் வந்துள்ள நிலையில், தர்ஷினி ஈஸ்வரியை நினைத்து விடாமல் அழுது கொண்டிருக்கின்றார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
பார்கவியை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரனிடம் ஈஸ்வரி பேசிய நிலையில், குணசேகரன் கோபத்தில் ஈஸ்வரியை அடித்து மண்டையை உடைத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஈஸ்வரியை நந்தினி, தர்ஷன், தர்ஷினி மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், மண்டைஓடு உடைந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
தர்ஷினி ஜீவானந்தத்திற்கு போன் செய்து விபரத்தை கூறிய நிலையில், அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். மேலும் போலிஸ் அதிகாரியும் வந்துள்ளார். இவர்களிடம் தர்ஷினி ஈஸ்வரி குறித்த விபரத்தை கூறியுள்ளார்.
வீட்டில் ஈஸ்வரி மருமகள் என்றும் அவரை பார்ப்பதற்கு விசாலட்சி குணசேகரனிடம் கேட்டு கெஞ்சுகின்றார். ஆனால் குணசேகரன் விடாமல் அவரைத் தடுத்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |