Ethirneechal: ஈஸ்வரி உடல்நிலையில் திடீர் மாற்றம்... குணசேகரனை தேடி வந்த போலிஸ்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியை பார்கவி சந்தித்து சென்ற பின்பு அவரது உடம்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார்.
தர்ஷனுக்காக குணசேகரனிடம் பேச சென்ற ஈஸ்வரியை அடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஈஸ்வரிக்கு நியாயம் கிடைப்பதற்கு ஜனனி மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் போராடி வரும் நிலையில், ஜனனி மீது கொலைபழியை போடுவதற்கு குணசேகரன் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் வெளிநாடு செல்வதாக கூறிய பார்கவி திடீரென ஈஸ்வரியை வந்து பார்த்துள்ளார். பார்கவி வந்ததும் ஈஸ்வரி உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் பார்கவி வந்து சென்றது மற்ற யாருக்கும் தெரியாத நிலையில், மருத்துவர்கள் இதுகுறித்து ஜனனியிடம் கேட்கின்றனர். ஜனனி மற்றும் தர்ஷினி இருவரும் உண்மை அறியாமல் குழப்பத்தில் காணப்படுகின்றனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |