Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி-கதிர்
தன்னுடைய காதலனை தேடி இஸ்லாமிய பெண்ணாக மாறி மண்டபத்திற்கு பார்கவி வருகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார். இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.
இவ்வளவு நாட்களாக ஜீவானந்தம், பார்கவி இருவரையும் கொலைச் செய்வதற்காக குணசேகரன் தான் ஆள் அனுப்பியதாக காட்டப்பட்டது. ஆனால் அறிவுக்கரசி இருவரும் இறந்த செய்தியை கேட்ட பொழுது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்படியென்றால் குணசேகரனுக்கு தெரியாமல் அறிவுக்கரசி பார்த்த வேலை தான் இது.
திட்டம் போடும் அறிவுக்கரசி
இந்த நிலையில், உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிக் கொண்டிருந்த பார்கவி, ஜீவானந்தம் இருவரில் ஜீவானந்தம் மீது துப்பாக்கி குண்டு துளைத்துள்ளது. அதன் பின்னர் ஜீவானந்தத்தால் நகர முடியாமல் ஒரு ஆற்றில் ரத்தம் வடிய மயங்கி கிடக்கிறார்.
பார்கவியால் அவரை காப்பாற்ற முடியவில்லை. தன்னை நம்பி வந்த பார்கவிக்கும் ஜீவானந்தத்திற்கும் பிரச்சினை என தெரிந்து கொண்ட ஜனனி தனியாக காரை எடுத்து கொண்டு தேடி செல்கிறார். அதையும் அறிவுக்கரசி மூலம் தெரிந்து கொண்ட போலீஸ்க்காரர்கள் அவரையும் கொலைச் செய்ய தேடுகிறார்கள்.
இப்படி சீரியல் பரபரப்பாக செல்லும் வேளையில் இஸ்மிய பெண் போன்று பார்கவி மண்டபத்திற்குள் தர்ஷனனை தேடி வருகிறார். மேக்கப் போடுவதற்காக வந்திருக்கும் பெண் பார்கவியா என்ற சந்தேகம் கதிருக்கு வர, இது குறித்து அறிவுக்கரசியிடம் விசாரிக்கிறார்.
தன்னுடைய தங்கையின் வாழ்க்கைக்காக அறிவுக்கரசி செய்திருக்கும் பாவம் இந்த திருமணத்தை சரியாக நடத்தி விடுமா? என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |