Ethirneechal: பார்கவியிடம் தஞ்சமடைந்த தர்ஷன்... வீட்டிற்கு வந்த ரவுடிகள்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் பார்கவி வீட்டில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அறிவுக்கரசியின் ஆட்கள் பார்கவி புகைப்படத்துடன் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
சமீபத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டு வீட்டு பெண்களை ஹோட்டல் தொழில் செய்வதற்கு குணசேகரன் சம்மதித்தார்.
ஆனால் சில தினங்களில் தர்ஷன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அறிவுக்கரசியிடமிருந்து எஸ்கேப் ஆகவும் செய்துள்ளார்.
இதற்கு வீட்டு பெண்கள் தான் காரணம் என்று நினைத்து குணசேகரன் அனைவரையும் கொடுமைப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில் பார்கவி இருக்கும் ஊரில் சுற்றித்திரிந்த தர்ஷன் தற்போது, பார்கவியின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
சில ரவுடிகள் பார்கவி புகைப்படத்தினை வைத்துக் கொண்டு அவரது தந்தை என்று தெரியாமல் அவரிடமே விசாரித்துள்ளனர். இதற்கு அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
