Ethirneechal: கொலை செய்யப்பட்ட பார்கவியின் தந்தை! குணசேகரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி சேர்ந்து பார்கவியின் தந்தையை கொலை செய்துள்ளதுடன், வீட்டு பெண்கள் குணசேகரனுக்கு எதிராக வந்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மற்றொரு புறம் வீட்டு பெண்களையும் ஹோட்டல் தொழில் செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அறிவுக்கரசியின் தங்கையை திருமணம் செய்ய மறுத்த தர்ஷன் அவர்களிடம் எஸ்கேப் ஆகி ஜீவானந்தத்திடம் சேர்ந்துள்ளார்.
பார்கவி மற்றும் அவரது தந்தையும் ஜீவானந்தத்துடன் இருந்த நிலையில், இதையறிந்த குணசேகரன் வீட்டில் நல்லவர் போன்று வேடம் போட்டு வீட்டு பெண்களை நம்ப வைத்துள்ளார்.
பின்பு ஜீவானந்தத்துடன் பார்கவி அவரது தந்தை, தர்ஷன் என அனைவரையும் வரவழைத்து தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். இதில் காயமடைந்த பார்கவியின் தந்தை கடைசியில் உயிரிழந்துள்ளார்.
தற்போது குணசேகரனையும், கதிரையும் எதிர்த்து வீட்டு பெண்கள் மீண்டும் வெளியேறி, போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |