Ethirneechal: வெட்கத்தில் நிற்கும் பார்கவி... சதி திட்டம் செய்யும் அன்புக்கரசி
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன், பார்கவி இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்துள்ள நிலையில் அன்புக்கரசியும் தயார் நிலையில் இருக்கும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளது. தர்ஷன் பார்கவி இருவருக்கும் ஜனனி தனது சாமர்த்தியத்தினால் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இவர்களின் மகிழ்ச்சியினை கெடுப்பதற்கு அன்புக்கரசி வீட்டிற்குள் நுழைந்து தனது சகுனி வேலையினை ஆரம்பித்துள்ளார்.

தர்ஷன் பார்கவி இருவரையும் ஹனிமூனுக்கு பெங்களூர் அனுப்ப யோசனை செய்த நிலையில், இதனை அறிந்து கொண்ட அன்புக்கரசி தனது நாடகத்தினை அம்பலப்படுத்தி அதனை நிறுத்தியுள்ளார்.
மற்றொரு புறம் சக்தி உண்மையைக் கண்டறிய தனுஷ்கோடி சென்றுள்ள நிலையில், அவரை கொலை செய்ய குணசேகரன் திட்டம் போட்டுள்ளார்.
தற்போது பார்கவி தர்ஷன் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு அரங்கேறிவரும் நிலையில், இதனை அன்புக்கரசி எவ்வாறு தடுக்க திட்டமிட்டுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |