Ethirneechal: தர்ஷனை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த அறிவுக்கரசி... சக்தி என்ன செய்யப்போகிறார்?
எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசியிடம் இருந்து எஸ்கேப் ஆகிய தர்ஷனை தீர்த்து கட்டுவதற்கு ஆட்களை அனுப்பியுள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சில மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த சீரியலும் தற்போது ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் முடங்கி இருந்த பெண்கள் தற்போது குணசேகரன் சம்மதத்துடன் ஹோட்டல் தொழிலில் கலக்கி வருகின்றனர்.
தர்ஷன் தற்போது திருமணத்திலிருந்து பின்வாங்கிய நிலையில், அறிவுக்கரசியிடமிருந்தும் எஸ்கேப் ஆகியுள்ளார்.
திருமணத்திற்கு தற்போது மறுப்பு தெரிவித்து எஸ்கேப் ஆகியதால், அறிவுக்கரசி உச்சக்கட்ட கோபத்தில் காணப்படுகின்றார். வீட்டில் ஈஸ்வரியும் தர்ஷனை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் சக்தி அறிவுக்கரசி ஆட்களுடன் தர்ஷனை தேடச் சென்ற நிலையில், தற்போது அறிவுக்கரசி சக்தியை கழற்றிவிடவும், தர்ஷனை பார்த்தால் தீர்த்து கட்டவும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |