Ethirneechal: கெத்தாக வீட்டுக்கு வந்த ஜனனி... கையில் வீச்சரிவாளுடன் அறிவுக்கரசி! பரபரப்பான ப்ரொமோ
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் வரும் நிலையில், அவரை வெட்டி சாய்ப்பதற்கு வீச்சரிவாளுடன் அறிவுக்கரசி காத்திருக்கின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகத்தில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றது. வீட்டில் மருமகள்களை ஆட்டி வைத்த குணசேகரனுக்கு தற்போது ஆப்பு வைக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது.
அதாவது தேவகி குறித்த உண்மையைக் கண்டறிந்து வீட்டிற்கு வந்த சக்தியை, வரும் வழியிலேயே கடத்தி ராமசாமியை சித்ரவதை செய்ய கூறியுள்ளார்.

சக்தியின் நிலையினை ஜனனியிடம் காட்டி அவரைக் காலில் விழுந்து கெஞ்ச வைத்தார். ஜனனியைக் காரணம் காட்டி வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் மிரட்டி வைத்தார்.
இந்நிலையில் ஜனனி சக்தியை தேடி கண்டுபிடித்து அவரது உயிரையும் காப்பாற்றியதோடு, குணசேகரன் செய்த அனைத்து குற்றத்தையும் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
இதனால் ஜாமினிலிருந்து வெளியே வந்த குணசேகரனை மீண்டும் கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தனது தம்பிகளுடன் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகியு்ளளார்.
ஜனனி செய்தது என்ன என்று தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் ஒருபுறம் குழப்பத்தில் உள்ள நிலையில் மற்றொரு புறம் அறிவுக்கரசி ஜனனியை வெட்டுவதற்கு அரிவாளுடன் காத்திருக்கின்றார்.
ஜனனியும் உள்ளே வந்த நிலையில், ஆவேசமாக எழுந்து அவரை வெட்டுவதற்கு செல்கின்றார். அடுத்த என்ன நடக்கவிருக்கின்றது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |