மண்டைய ஒடச்சிடுவேன்.. ஆத்திரத்தில் அன்புக்கரசி எடுத்த முடிவு
“எனக்கு கல்யாணமே வேணாம் பா, மண்டைய ஒடச்சிடுவேன்..” என எதிர்நீச்சல் சீரியல் அன்புக்கரசி பேசிய காணொளி சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில், தர்ஷன் திருமணத்தில் அடுத்தடுத்து ஏகப்பட்ட திருப்பங்கள் வந்தன. ஆனாலும் கடைசியாக தர்ஷன் அவருடைய காதலியான பார்கவியை கரம்பிடித்து விட்டார்.
இதற்கிடையில், அறிவுக்கரசி- குணசேகரன் செய்த அனைத்து குற்றங்களும் அனைவருக்கும் தெரியவருகிறது.
குணசேகரனின் வீராப்புக்கு ஆதரவாக நின்று தன்னுடைய தங்கையை திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என போராடிய அறிவுக்கரசி கொலை பலியுடன் சிறைக்கு போய் விட்டார்.
அடுத்து, வீட்டிற்கு வந்த குணசேகரன் அலுமாரியில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்குள்ள ஆதாரங்களை சக்தி எடுத்து விட்டார்.
கடுப்பான அன்புக்கரசி
இந்த நிலையில், வீட்டிற்கு வந்த புது மருமகளை வைத்து தல தீபாவளி தர்ஷன் கொண்டாடுகிறார்.
திருமண ஆசையில் இருந்த அன்புக்கரசிக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கோபமான அன்புக்கரசி, “ உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டேன்..” என சாபம் விட்டுவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
அதன் பின்னர், “ எனக்கு திருமணமே வேண்டாம். மண்டைய ஒடச்சிடுவேன்..” என்கிற கீர்த்தி சுரேஷின் பிரபல வசனத்திற்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ உங்களின் வருகைக்காக தான் நாங்கள் காத்திருக்கிறோம்..” எனக் எதிர்நீச்சல் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
