Ethirneechal: வில்லத்தனத்துடன் வீட்டிற்கு வந்த அன்புக்கரசி... தர்ஷன் வாழ்க்கையில் ஏற்படும் விரிசல்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் வீட்டிற்குள் நுழைந்த அன்புக்கரசி அவர்களின் வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்த சதி திட்டம் போட்டு வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இதன் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகியுள்ளது.
இதில் குணசேகரின் திட்டத்தினை முறியடித்து அவருக்கு தோல்வியைக் காட்டியுள்ளனர் வீட்டு மருமகள்கள்.
இதனால் வெறிகொண்டு குணசேகரன் மட்டுமின்றி அவரது தம்பியும் காணப்படுகின்றனர். இதனால் மீண்டும் அன்புக்கரசியினை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

வீட்டிற்கு வந்ததும் தனது ஆட்டத்தையும் அன்புக்கரசி ஆரம்பித்துள்ளார். ஆம் தர்ஷனும், தானும் ஒன்றாக இருந்ததாக கூறி பார்கவி மனதில் விஷத்தை விதைத்துள்ளார்.
கதிர் மற்றும் ஞானம் போட்டுள்ள திட்டம் இதன்மூலம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றொரு புறம் குணசேகரனுக்கு எதிராக தன்னிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற உண்மையினை ஜனனி கூறியுள்ளார்.
இந்த விடயம் குணசேகரன் கூட்டணிக்கு தெரியவந்தால் கதையின் போக்கு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |