Ethirneechal: சக்தியை சித்ரவதை செய்யும் ராமசாமி... தீவிரமாக நடக்கும் அன்பு திருமண ஏற்பாடு
எதிர்நீச்சல் சீரியலில் அன்புவிற்கு தர்ஷனை திருமணம் செய்வதற்கு அறிவுக்கரசி தீவிரமாக ஏற்பாடு செய்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் குணசேகரனின் ஆட்டம் தாறுமாறாக அதிகரித்துள்ளது. அதாவது சக்தியை சித்ரவதை செய்து ஜனனியை தனது பேச்சுக்கு கீழ்படிய வைத்துள்ளார்.
ஜனனியைக் காரணம் காட்டி குடும்பத்தில் உள்ள பெண்களை மிரட்டி காரியத்தை சாதித்து வருகின்றார். பார்கவியை வீட்டைவிட்டு கிளம்புவதற்கு கூறியுள்ளார்.

ஆனால் அவர் எப்பொழுதும் போல் அறிவுக்கரசி பேச்சுக்கு கீழ்படியாமல் தனது வேலையைப் பார்த்து வருகின்றார். மறுபுறம் ராமசாமியிடம் இருக்கும் சக்தியின் நிலை மிகவும் மோசமாகி வருகின்றது.
ஜனனி சக்தியைக் காப்பாற்றுவதற்கு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், குணசேகரன் வீட்டிலிருந்து பெண்களை அடக்குவதற்கு ராமசாமிக்கு போன் செய்து ஜனனியை மிரட்ட கூறியுள்ளார்.
சக்தியின் கதறலைக் கேட்ட ஜனனி உடனே போன் செய்து வீட்டில் பேசுவதாக கூறி கதறுகின்றார். வீட்டில் அறிவுக்கரசியின் ரவுடித்தனத்தினை பார்த்து பயங்கர கோபத்தில் இருக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |