Ethirneechal: சமையலறையில் ஞானம்... சக்தியுடன் நெருங்கும் பெண் யார்?
எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், ஞானம் மற்றும் கரிகாலன் வீட்டில் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருகின்றனர். மேலும் குணசேகரன் வருகையால் பெண்கள் வெளியேறி தற்போது லாட்ஜில் தங்கி வருகின்றனர்.
தற்போது வீட்டில் கரிகாலன் மற்றும் ஞானம் இருவரும் சமையல் செய்து பிள்ளைகளை கவனித்து வருகின்றனர்.
சக்திக்கு குந்தகை என்ற பெண் அறிமுகமாகியுள்ள நிலையில், இதனால் சக்திக்கும், ஜனனிக்கும் இடையே பிரிவு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |