Ethirneechal: அம்பலமாகிய காதல் விவகாரம்! தர்ஷனுக்கு மிரட்டல் விடுத்த அறிவுக்கரசி
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனின் காதல் விவகாரம் அறிவுக்கரசிக்கு தெரியவந்துள்ள நிலையில், தர்ஷனுக்கு தற்போது உதவி செய்துவிட்டு அவரை மிரட்டவும் செய்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். கதிர் குணசேகரனாக மாறி பல மோசமான காரியங்களை செய்து வருகின்றார்.
தர்ஷன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், தற்போது பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகின்றார்.

Siragadikka Aasai: போலீஸாரின் குடும்பத்தில் நெருக்கமாகும் சீதா... பகையை வளர்க்கும் முத்து! நடப்பது என்ன?
பெண்ணின் அக்கா அறிவுக்கரசி வில்லியாக வலம்வருகின்றார். தர்ஷன் காதல் விவகாரம் அறிவுக்கரசிக்கு தெரியவரவே அவர் அடியாட்களை அனுப்பி மிரட்டியுள்ளார்.
இதனை தர்ஷனிடமும் கூறியுள்ள நிலையில், இதுவரை எப்படி இருந்தாலும் பரவாவில்லை, தனது தங்கை அன்பை திருமணம் செய்த பின்பு எதாவது பிரச்சனை என்றால் கண்ணை நோண்டி எடுத்துடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |