லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுந்தும் தலைமறைவாகிய நபர்! இப்படி ஒரு சோகமா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் சேர்ந்த அனூப் என்ற ஆட்டோ டிரைவருக்கு 25 கோடி ரூபாய் லொட்டரி பரிசாக கொடுக்கப்பட்டது.
தன் மகன் சேமித்து வைத்து உண்டியல் ஒன்றை உடைத்து அந்த பணத்தில் 500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கினேன் எனவும், எனக்கு 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கும் நிலையில் 10% ஏஜென்ட் கமிஷன் ஆகும் 30% கவர்மெண்ட்க்கு வரி போக மீதம் 15 கோடியே 75 லட்சம் கணக்கில் வர வைக்கப்படும்.
நான் இரண்டு வருடம் கழித்து அந்த பணத்தை வைத்து தொழில் தொடங்க உள்ளேன் எனவும் கூறியிருந்தார். ஆனால், அந்த பணம் இன்றைக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அவர் தற்போது நிறைய பேர் உதவி என்றும் கடன் கேட்கிறார்கள். எனக்கு நிம்மதி இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.
ஓணம் பம்பர் பரிசு கிடைத்த போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது ஆள் கூட்டமும் டிவி கேமராக்கள் யூடியூப் கண்டபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால், இப்பொழுது என் சந்தோஷம் எல்லாம் போய்விட்டது. வெளியில் சென்றாள் எந்த இடத்திலும் உதவி கேட்டு நிறைய பேர் தினமும் வருகின்றனர் என் சகோதரி வீட்டுக்கு இப்போது இருக்கிறேன்.
என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனை சென்றலும் பின் தொடர்கிறார்கள் சொந்த வீட்டுக்கே செல்ல முடியாத நிலை இப்பொழுது பணம் எனக்கு கிடைத்திருக்க வேண்டாம் என்று நினைக்கின்ற நிலைமைக்கு நான் இப்போது வந்து விட்டேன்.
மேலும், என் கையில் இன்னும் பணம் வரவில்லை ஆனாலும் கொஞ்சமாவது பணம் கொடு எனக்கு கடன் கொடு எனக்கு உதவி என்று என்னை தினமும் நிறைய நபர்கள் வந்து சந்திக்கிறார்கள். வீடு மாறி சென்றாலும் விடவில்லை. தலைமறைவாக இருக்கின்ற நிலைமைக்கு வந்து விட்டேன்.
இப்பொழுது வீடியோ பேசி இருக்கும்போதே என் வீட்டின் கேட்டை தட்டிக் கொண்டு ஆட்கள் நிற்கிறார்கள் பணம் கேட்டு நிற்கிறார்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் இங்கே நிற்கிறார்கள்.
நானும் கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்தால் வந்தேன் எனக்கும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் இப்போது எனது நிலைமை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என அனூப் தன் மனவருத்துடன் பேசியுள்ளார்.