எந்த சாபமும் பலிக்கவில்லை! முதல் வாரிசை கையில் சுமந்த விஜய் டிவி பிரபலம் - என்ன குழந்தை தெரியுமா?
விஜய் டிவி கலக்க போவது யாரு புகழ் நவீனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை அவரின் மனைவி இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.
கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பட்டித் தொட்டி எங்கும் புகழின் உச்சம் தொட்டவர் ஆனவர் நவீன்.
இப்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் கணேசனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒரு சாதரண போட்டியாளராக அறிமுகமாகி, இன்று அதே சேனலில், சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை பொறுத்தவரையில் நவீனுக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் நவீன் விவகாரம் காவல் துறை வரை சென்றது.
ஆனால் நவீன் இதை மறுத்தார். காதல் மட்டும் தான் திருமணம் ஆகவில்லை.
அதன் பின்பு நவீனுக்கும் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரிக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது நவீன், கிருஷ்ணகுமாரியுடன் வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு நவீனின் மனைவி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்து இருந்தார்.
சாபம் விட்ட அனைவருக்கும் நன்றி
அப்போது மேடையில் எமோஷ்னலாக பேசிய அவர், ”எங்கள் கல்யாணத்திற்கு பிறகு பலரும் சாபம் விட்டனர். எங்களுக்கு குழந்தை பிறக்காது, நாங்கள் பிரிந்து விடுவோம் என்றனர்” என கூறி கண்கலங்கினார். சாபம் விட்ட அனைவருக்கும் நன்றி இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.
அதனைத்தொடர்ந்து மனைவியின் வளைக்காப்பு படங்களை நவீன் இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார்.
பலரும் இதற்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இந்நிலையில் நவீன் - கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு அழகான பென் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையின் முகத்தை மட்டும் மறைத்து நவீனின் மனைவி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
அதில் “நீ இந்த பூமிக்கு வருவது அவ்வளவு எளிதாக நடந்திடவில்லை செல்லமே, எங்களின் இறுதி மூச்சு வரை உன்னை நேசிப்போம்” என்ற கேப்ஷனையும் கிருஷ்ணகுமாரி கொடுத்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.