குளத்தில் தவறிவிழுந்து தத்தளித்த குட்டியானை! தாய் யானை தரமான செயல்
குளம் ஒன்றில் தவறிவிழுந்து தத்தளத்த குட்டி யானையை தாய் யானை மற்றொரு யானையுடன் மீட்கும் காட்சி நெகிழ வைத்துள்ளது.
குளத்தில் குட்டி யானை
தாய் யானை தனது குட்டியுடன் குளத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்த நிலையில், திடீரென குட்டி தவறி குளத்திற்குள் விழுந்து தத்தளித்துள்ளது.
தாய் யானை குட்டியை காப்பாற்ற வழி தெரியாமல் தவித்த நிலையில், குட்டி குளத்தில் விழுந்த சத்தத்தினை கேட்ட மற்றொரு யானையும் நொடிப்பொழுதில் ஓடிவந்துள்ளது.
ஓடி வந்த யானை முதலில் நின்ற யானை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, சரியான பாதையில் சென்று காப்பாற்றுமாறு தனது செய்கையினால் காண்பித்துள்ளது. பின்பு இரண்டு யானைகளும் சேர்ந்து குளத்திற்குள் இறங்கிய நிலையில், குட்டியை ஆழமற்ற திசை நோக்கி வேகமாக நகர்த்தி மீட்கும் காட்சியே இதுவாகும்.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், குட்டி விழுந்ததை அவதானித்த மூன்றாவது யானை ஒன்று தடுப்பை மீறி தன்னால் வந்து காப்பாற்ற முடியாமல் அங்கும், இங்கும் பரிதவித்துள்ளதையும் காணலாம்.
குறித்த காட்சி தென் கொரியாவில் உள்ள சியோல் பூங்காவில் எடுக்கப்பட்ட நிலையில், Gabriele Corno என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளியினை பதிவிட்டுள்ளார்.
In the Seoul zoo, two elephants rescued baby elephant drowned in the pool pic.twitter.com/zLbtm84EDV
— Gabriele Corno (@Gabriele_Corno) August 13, 2022