பாகனை தூக்கி வீசிய பெண்! கோபத்தில் யானை செய்த காரியம்... பதபதைக்கும் காட்சி
கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீது மோதியதில் யானை மிரண்டு ஓடி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மகாதேவர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவு நேர பூஜைக்காக கொண்டுவரப்பட்ட யானை ஒன்று லாரியிலிருந்து இறங்கி கொண்டிருந்துள்ளது.
அப்போது யானையை இறங்கியதுன் பாகன் ஒருவர் யானை மீது ஏற கீழே இரண்டு பாகன்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் மகனுடன் வந்த பெண் ஒருவர் யானை பாகனில் ஒருவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
பெண் மற்றும் அவரது மகன், தூக்கிவீசப்பட்ட பாகன் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், யானை மிரண்டு ஊர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் மீதமிருந்த பாகன்கள் சுதாரித்துக் கொண்டு 30 நிமிடத்தில் யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இக்காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.