30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த யானை குட்டி! நெஞ்சை உருக்கும் அரிய புகைப்படம்
ஜார்க்கண்ட்டில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தற்செயலாக விழுந்த யானை குட்டியை வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அப்பகுதியில் யானை கூட்டங்கள் சுற்றித் திரிந்துள்ளதை கிராமவாசிகள் கண்டுள்ளனர்.
அதில் ஒரு யானை குட்டி கிணற்றில் விழுந்துள்ளது. இது குறித்து உள்ளூர்வாசிகள் வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Heart warming indeed. pic.twitter.com/jUP0h904jq
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) May 4, 2021
விரைந்து செயற்பட்ட வனத்துறை அதிகாரிகள் யானை குட்டியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இதேவேளை, மீட்பு பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படஙக்களும், வீடியோக்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.