வீட்டில் தனியாக இருந்த சிறுமி! வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி....ஷாக்கில் கிராமவாசிகள்
வீட்டில் தனியாக இருந்த சிருமி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் குறித்து தேனி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது தேவதானப்பட்டி. இங்குள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் மாயகிருஷ்ணன். அவரது மனைவி செல்வபழனி.
கூலி வேலை செய்கிறார். இந்த தம்பதியருக்கு 11 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் 8 வயதில் ஒரு மகள் உள்ளனர். மாயகிருஷ்ணன் வேலை நிமித்தமாக ஒரு மாதத்திற்கு முன்பு டெல்லி சென்றுள்ளார். தாய் செல்வபழனியுடன் மூன்று பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், தாய் செல்வபழனி காலை கூலி வேலைக்கு சென்று மீண்டும் பிற்பகல் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
குழந்தையை மீட்ட தாய் செல்வபழனி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுமி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
சிறுமியின் மரணம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை பொலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
8 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.