சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு
சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு சென்றார்.
இந்நிலையில் ஜூன் 5ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை சனி வக்ர நிலையாக இருப்பார்.
ஜூன் 12ம் தேதி சனி பகவான் தன்னுடைய பழைய நிலையான மகர ராசிக்கு திரும்புவார்.
இதன் காரணமாக இரண்டு ராசியினர் மீது இருந்த சனி பகவானின் பார்வை நீங்கி அபரிமிதமான வெற்றியைப் பெறுவார்கள்.
ஒரு ராசியினர் தற்காலிகமாக அனுபவித்து வந்த ஏழரை சனி பலனிலிருந்து விடுபடுவார்கள்.
சனி ராசி பரிவர்த்தனை 2022
சனி தேவனின் நிலை ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. சில ராசிக்காரர்களுக்குச் சனியின் நிலை நற்பலனளிக்கும். அதே வேளையில் சில ராசிக்காரர்கள் சிரமங்களைத் தரக்கூடியதாக இருக்கும்.
மகத்தான வெற்றி கிடைக்கும் ராசிகள்
ஒரு ராசிக்கு 4, 7 மற்றும் 8ம் வீட்டில் சனி பகவானின் சஞ்சாரம் செய்தால் அவர்களுக்கு அஷ்டம சனி, கண்ட மற்றும் அர்த்தாஷ்டம சனி ஏற்படும். இதனால் பல்வேறு வகையில் தொல்லைகள் ஏற்படும்.
தற்போது கும்பத்திலிருந்து மகரத்திற்கு சனி மீண்டும் திரும்புவதால் கடகம், சிம்ம விருச்சிக ராசியினர் அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனியிலிருந்து விடுபடுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் மீன ராசிக்கு ஏழரை சனி நீங்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு அஷ்டம சனி நீங்க உள்ளது.இதனால் உங்களின் முயற்சிகள் சிறப்பாக வெற்றி அடையும். அதன் மூலம் நல்ல வருமான உயர்வு பெற்றிடுவீர்கள். வீண் செலவுகள் நீங்கும். நிதி தொடர்பான சிக்கலிலிருந்து விடுபடுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு தங்களின் குடும்பம், பணியிடத்தில் ஏற்ற, இறக்கமான பலன்களே கிடைக்கும். கண்டக சனி காரணமாக குடும்பத்தில் அமைதி கெட வாய்ப்புள்ளது. உடல் நலம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க வேண்டியது வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சனி அதிசார பெயர்ச்சியால் ஏற்பட்ட அர்த்தாஷ்டம சனி விலக உள்ளது. இதனால் உங்களின் பிரச்னைகள் விரைவாக தீரும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மீன ராசிக்கு ஏழரை சனி நீங்கும்
கிரகங்களின் நீதி தேவனாக விளங்கும் சனிதேவர் கும்ப ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிப்பதால் மீன ராசிக்கு சிறிது காலமாக ஏழரை சனி அனுபவித்து வந்த பாத சனி அனுபவித்து வந்த மீன ராசியினர், அதிலிருந்து விடுபடுவார்கள்.
மீன ராசியினர் பெரியளவில் சனியின் மூலமாக நற்பலன்கள் கிடைக்காவிட்டாலும், அவர்கள் தற்காலிகமாக அனுபவித்து வரும் ஏழரை சனியிலிருந்து விடுபடுவதே மிகவும் நற்பலனாகக் கருதுவது நல்லது.