வயிறு முட்ட சாப்பிட்டு விட்டீர்களா? சாப்பிட்ட பின்பு இதை செய்தால் போதும்
நம்மில் பலருக்கும் ஒரு மிக முக்கிய கருத்து உண்டு... சாப்பிடுவதற்காக தானே வாழ்கிறோம் என்று பேசுவார்கள். அதிக சாப்பாடு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இளைய தலைமுறையினர் அதிக சாப்பாட்டை எடுத்துக் கொள்வதில் பெரும் பிரச்சினைகளை சந்திப்பதில்லை. ஆனால், நடுத்தர வயதினர் மற்றும் பெரியவர்களுக்கு அதிக உணவுகளை எடுத்துக் கொண்டபின் பல சங்கடங்கள் உருவாகின்றன.
குறிப்பாக, மூச்சுவிடுவதில் சிரமம், வேறு ஒரு பணியை செய்வதில் சிரமம், தூக்கம் வருவது போன்று பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. இங்கு நாம் அதிக உணவை எடுத்துக் கொண்டபின் செய்ய வேண்டிய மிக முக்கியமான பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம். வச்சிராசனம் பலரும் உணவு உண்ட பிறகு சில நேரம் நடப்பது பிரசனையாக இருக்கிறது. பல்வேறு பணிகளை அவர்களால் செய்ய முடிவதில்லை. இந்த கட்டுரையின் வழியாக நாம் வஜ்ராசனம் என்ற செயல்முறை யோகாவினை செய்வதன் மூலம் உணவானது சரியாக சேமிப்பதற்கு உதவுகிறது.
வச்சிராசனம் என்பது உங்களது இரண்டு கால்களையும் நன்றாக பின்நோக்கி மடித்து உட்கார்ந்து கொள்வதாகும். அதாவது, முட்டிபோட்டு உட்கார்ந்து பின் காலின் மீது உட்காருவது தான் வஜ்ராசனம். உங்களது இரண்டு கைகளையும் உங்களது முட்டுகளில் அருகே வைத்து யோகாசன முத்திரையை செய்து உங்களது மூச்சினை சீராக உள்ளே இழுத்து வெளியே விடுவது முக்கியமானதாகும். இந்த நிலையிலேயே தொடர்ந்து சில நிமிடங்கள் தொடர்ந்தால் போதுமானது.
சுடு தண்ணீர் குடிக்கலாம் சாப்பிட்டு முடித்த பிறகு அரை மணி நேரம் கழித்து மிக குறைவான சூட்டில் இருக்கக்கூடிய சுடுதண்ணியினை குடிக்கலாம். இந்த சுடு தன்மையானது உங்களது செரிமான மண்டலத்தை ஊக்கப்படுத்துவது உடன் மிக விரைவாக செரிப்பதற்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. தயிர் மற்றும் மோர் எத்தகைய அதிகமான உணவை எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் இடமே இல்லாத பட்சத்திலும் கூட கொஞ்சமாக தயிர் அல்லது மோர் ஆகியவைகளை குடிக்கலாம்.
இவற்றினை குடிப்பது உங்களுக்கு செரிமான மண்டலத்தின் பணியினை அதிகப்படுத்தி மிக விரைவாக சேர்ப்பதன் மூலம் உங்களுடைய உடல் ஆரோக்கியமான நிலையில் தொடர்வதற்கு பங்களிப்பாக இருக்கும். பல்லை சுத்தம் செய்யுங்கள் அதிக உணவை உட்கொண்டதற்கும் பல்லினை விளக்குவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றால் இதில் இரண்டு மிக முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
ஒன்று அதிக சாப்பாட்டின் போது பல்லில் தேங்கிவிடும் உணவுகளின் காரணமாக பற்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன மற்றும் வாயிலிருந்து உணவுகள் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு மீண்டும் பசியை தூண்டக்கூடிய அளவுக்கு உடல் சென்று விடும்.
எனவே, செரிமானமும் நன்றாக வேலை செய்யும் மற்றும் பற்களுக்கும் பாதிப்புகள் இருக்காது. எனவே, இந்த இரண்டு காரணங்களுக்காக நீங்கள் கண்டிப்பாக பற்களை விளக்க வேண்டும். வாக்கிங் இவை அனைத்துக்கும் பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு நீங்கள் கடுமையான ஓட்டமும் அல்லது நீண்ட நேர நடையும் நடக்க வேண்டிய அவசியமில்லை.
உங்களை சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம். இந்த நடை போடுவதன் மூலம் பயிற்சியின் காரணமாக வயிற்றில் அழுத்தம் குறைந்து வருகிறது. எனவே, உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக அழுத்தம் பலரும் இந்த பிரச்சனைகளில் ஈடுபடுகின்றனர்.
அதாவது, சாப்பிடுவதற்கு முன்பு எதுவுமே யோசிக்காமல் சாப்பிட்டு விட்டு பின் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று கடுமையாக பயபடுகின்றனர் அதுவும் டயட்டில் கடுமையாக பின்பற்றுபவர்கள் இவ்வாறு அதிகம் ஈடுபடுகின்றனர். உடல் எடையின் மீது அதிக கவனம் இருப்போர் அல்லது ஏதேனும் நோயினால் தாக்கப்பட்டு இருப்போர் இதுபோன்ற அதிகமான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் வரும் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் உணவு உண்டு விட்டீர்கள் என்றால் அதன் பிறகு நடந்தது பற்றி யோசிக்க வேண்டாம் நீங்கள் அவற்றை எப்படி சரி செய்வது அதற்கேற்ற பயிற்சியை உடலுக்கு எப்படி தருவது என்பதில் மிகவும் கவனமாக இருந்தால் உங்களால் நல்ல முன்னேற்றத்தை அடைந்து விட முடியும்.