viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல்
யானைகள் தங்கள் கால்கள் வழியாக ஒலிகளை உணரும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன, மேலும் நேற்று காலை தெற்கு கலிபோர்னியாவை உலுக்கிய 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போது அவை ஒரு "எச்சரிக்கை வட்டத்தை" உருவாக்கிய அரிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிகியுள்ளது.
இந்நிலையில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் வசிக்கும் யானைகள், "எச்சரிக்கை வட்டம்" என்று அழைக்கப்படும் ஒரு தற்காப்பு நடத்தையில் மூலம் தங்களின் குட்டிகளை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது காடுகளில் மந்தையின் இளைய உறுப்பினர்களை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப் பயன்படுகிறது என்று மிருகக்காட்சிசாலையில் உள்ள பாலூட்டிகளின் கண்காணிப்பாளர் மிண்டி ஆல்பிரைட் குறிப்பிட்டுள்ளார்.
Stronger together 🐘
— San Diego Zoo Wildlife Alliance (@sandiegozoo) April 14, 2025
Elephants have the unique ability to feel sounds through their feet and formed an "alert circle" during the 5.2 magnitude earthquake that shook Southern California this morning. This behavior is a natural response to perceived threats to protect the herd. pic.twitter.com/LqavOKHt6k
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |