அதிகாலை 3 மணிக்கு பூனை கடிப்பது போன்று கனவு வந்தால் என்ன நடக்கும்? ஆபத்து நிச்சயம்
பலருக்கும் அதிகாலை கனவு பழிக்குமா என்ற சந்தேகம் இருக்கும்.
அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் 3 - 4 மணிக்கு திகில் கனவுகள் கண்டு பலரும் பயத்தில் முழிப்பது வழக்கம்.
இந்த கனவுகள் பழிக்குமா? ஏன் இந்த நேரத்தில் நமக்கு முழிப்பு வருகிறது? உள்ளிட்ட பல கேள்விகள் நமக்குள் இருந்தாலும், அதனை யாரும் பெரிதாக கண்டுக் கொள்வதில்லை.
அந்த வகையில், அதிகாலை 3 மணியளவில் பூனை கடிப்பது போன்று கனவு வந்தால் என்ன பலன் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பூனை கடிப்பது போன்று கனவு
பூனைகள் ஆயிரக்கணக்கான வருடங்களாக புராணங்களில் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. எகிப்திய கலாச்சாரத்தில் பூனைகள், பயிர்களைப் பாதுகாக்கும் மற்றும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் தரும் தெய்வமாக பார்க்கப்படுகிறது.
மேலும், ஜப்பானியர்கள் பூனைகள் புனிதமானவர்களாகவும், ஆன்மாக்களின் பாதுகாவலராகவும் பார்க்கிறார்கள்.
பூனைகள் பாரம்பரியமாக பெண்மையுடன் தொடர்புடையதாக இருப்பதால் மந்திரவாதிகளுக்கு உதவிச் செய்யும் என்றும் கூறுகிறார்கள். இவற்றை தவிர்த்து சிலர் பூனை, பிசாசுடன் தொடர்புள்ளது. அபாயம், அசுபமான பிராணி என்றும் பார்க்கிறார்கள்.
கருப்பு பூனை கனவு
கருப்பு பூனை கனவில் வந்தால் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. அவை மாந்திரீகம் மற்றும் அமானுஷ்யத்துடன் நெருக்கமான கனவாக கருதப்படுகிறது.
அதிகாலையில் கனவில் கருப்பு பூனை வந்தால், நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தமாகும். முடிவுகளை இது போன்ற நேரங்களில் கவனமாக எடுக்க வேண்டும்.
கோபமான பூனை கனவு
பூனை கோபமாக இருப்பது போன்று கனவு வந்தால் இயல்பாக பெண்களுடன் தொடர்புடையவை. வாழ்க்கையில் கூடிய விரைவில் ஒரு பெண் வரப்போகிறாள் என்று அர்த்தமாகும்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க கடின உழைப்பால் முன்னுக்கு வருவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா?
உங்களுக்கு வேண்டப்பட்ட அல்லது நெருங்கிய பெண் கஷ்டத்தில் உள்ளார் என்றும் அர்த்தமாகும். அதிலும் குறிப்பாக பாரம்பரியமாக பெண்ணாகவும் இருக்கலாம்.
இன்னும் சிலர் பூனை கோபமாக இருப்பது போன்று கனவு வந்தால் ஏதோவொரு விஷயத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என பொருட்ப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
