உறங்க சென்ற இளம்பெண்... கதவை உடைத்து பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருமணம் முடிந்து 8 மாதத்திலேயே இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம், ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் ஸ்னேகா(19), இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பனையூரை சேர்ந்த பிரமோத்(25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆரம்பம் முதலே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு கொடுமை தாங்காமல் ஸ்னேகா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பிரமோத் சண்டையிட்டாதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், உறங்க சென்றவர் வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்கவில்லை.
பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கிலிட்டு தொங்கியவாறு ஸ்னேகா இறந்துள்ளார்.
தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.