குடிபோதையில் நடுரோட்டில் இளம் பெண் செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இளம்பெண் ஒருவர் குடித்துவிட்டு மதுபோதையில் நடு ரோட்டில் படுத்து தூங்கிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புனேவில் திலக் சாலையில் உள்ள ஹிராபாக் என்ற ரோட்டில் கடந்த நாட்களுக்கு முன்பு இரவு 10:30 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது,.
அப்போது, போதையில் இருந்த இளம் பெண், சிவப்பு நிற மேலாடை மற்றும் கருப்பு ஜீன்ஸ் அணிந்திருந்த நிலையில், மது போதையில் சாலையில் படுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது, சத்தம் போடுவது என போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளார்.
மேலும், பல பயணிகள் அந்தப் பெண்ணை சாலையிலிருந்து ஒதுங்கி செல்லும்படி கேட்டனர், ஆனால் பயனில்லை. அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும், அந்த பெண் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
A drunk girl in Pune sitting in the middle of the road ?
— Varun Bahl?? (@bahl65) August 4, 2021
Video from @IndiaToday pic.twitter.com/7DTiIV9JEs