வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடித்துப் பாருங்க! ஏகப்பட்ட அதிசயத்தை உணர்வீங்க
வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலையில் சுடுதண்ணீர்
பொதுவாக காலை எழுந்ததும் நாம் அருந்தும் பானம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது. அந்த வகையில் காலையில் எழுந்ததும் சிலர் தண்ணீர் பருகுவதையும், சிலர் சுடு தண்ணீர் பருகுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அவ்வாறு சுடு தண்ணீர் பருகினால் என்னென்ன நன்மைகளை பெற முடியும், உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

நன்மைகள் என்ன?
காலை வெறும் வயிற்றில் சுடுதண்ணீர் குடிப்பதால் செரிமான தூண்டப்பட்டு நச்சக்கள் வெளியேற்றப்படுவதுடன், உடல் சுத்தமாகி வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கின்றது. கொழுப்புக்களை கரைக்கவும், அஜீரணக் கோளாறையும் தவிர்க்கின்றது.
வயிறு உப்புசமும் தவிர்க்கப்படுகின்றது. சிரமம் இல்லாமல் மலம் கழிக்கவும் உதவுகின்றது. உடல் எடை மேலான்மைக்கும் உதவுகிறது.

ரத்த நாளங்களை விரிவடைய செய்து ஆக்ஸிஜன் வினியோகத்தை மேம்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகின்றது. உடலை சூடேற்ற காலையில் வெந்நீர் பருகலாம்.
தசை பிடிப்புகள், நெஞ்செரிச்சல் மற்றும் மனநலனை சீராக்க சுடுதண்ணீர் பருகலாம். மேலும் உடலை நீறே்றமாகவும், நரம்பு மண்டலத்தை அமைதி படுத்தவும் செய்கின்றது.

நீரேற்றத்தினை சரிசெய்வதால், உடலில் சோர்வு, தூக்கமின்மை பிரச்சனை வராமல் தடுக்கின்றது. அதிக ஆற்றலுடன் உங்களை வைத்திருக்க உதவுகின்றது.
வெறும் வெதுவெதுப்பான தண்ணீரை பருகவில்லை எனில் அதில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம் அல்லது சீரகம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரையும் பருகலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |