இரட்டை மாஸ்க் போடுறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமடைந்துள்ளது, ஆக்சிஜன் இல்லாமல், படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் இறப்பது தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இரட்டை மாஸ்க் அணிவது நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் என கூறப்படுகிறது, அப்படி இரட்டை மாஸ்க் அணிந்தாலும் எதை செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக்கூடாது என விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
செய்யக்கூடியவை
* சர்ஜிக்கல் மாஸ்க்கை முதலில் போட்டு அதன் மேல் துணி மாஸ்கை போட வேண்டும்.
* சர்ஜிக்கல் மாஸ்கில் உள்ள கம்பியை மூக்குப் பகுதியில் வைத்து அழுத்தி இறுக்கமாக பொருந்துமாறு செய்ய வேண்டும்.
* இரண்டு மாஸ்க் போட்ட பின்னர் இயல்பாக சுவாசிக்க முடிவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
செய்யக்கூடாதவை
* 2 சர்ஜிக்கல் மாஸ்க் அல்லது 2 துணி மாஸ்க் அணியக்கூடாது, ஒரு சர்ஜிக்கல் மாஸ்க், ஒரு துணி மாஸ்க் அணிய வேண்டும்.
* ஒரு மாஸ்க்கை தொடர்ந்து இரண்டு நாட்கள் அணியக்கூடாது.
* சர்ஜிக்கல் மாஸ்க்கை ஒருமுறை பயன்படுத்திய பின்னர் குப்பையில் போடவும்,
* துணி மாஸ்க்கை ஒருமுறை பயன்படுத்திய பின்னர் துவைத்து பயன்படுத்தவும்.