உப்பு கலந்த நீரில் தலை கழுவினால் நரைமுடி பிரச்சினை வருமா? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தற்போது இருக்கும் பெண்கள் தங்களின் ஆரோக்கியம் மற்றும் அழகு விடயத்தில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.
அந்த வகையில் கூந்தலை சிறந்த முறையில் பேண வேண்டும் என நினைப்போம். ஆனால் சில சூழல் காரணிகளால் கூந்தல் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
அதில் ஒன்று தான் உப்பு கலந்த நீரில் குளிப்பது. சிலர் கடல் தண்ணீர் அடிக்கடி குளிப்பார்கள். இவ்வாறு குளிப்பவர்கள் மனதில் எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும்.
அதாவது, உப்பு தண்ணீரில் குளிப்பது சீக்கிரமே உங்கள் கூந்தலுக்கு நரைமுடி பிரச்சினை வருமா? என சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
இது போன்ற சந்தேகங்கள் இருப்பவர்கள் தொடர்ந்து இந்த பதிவில் விரிவான விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்.
உப்பு நீரால் நரை முடி பிரச்சனை வருமா?
உப்பு கலந்த நீரை குளிப்பதற்கு பயன்படுத்துவதால் முடி வறண்டதாகவும் உடைந்து விடக் கூடியதாகவும் மாறுகிறது. இதன் காரணமாக தலைமுடி வளர்ச்சி தடைப்படுகின்றது.
அத்துடன் சூரிய ஒளியில் அதிக நேரம் தலைமுடியை காட்டுவதால் நரைமுடி பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
வெள்ளை முடிக்கான ஆபத்து காரணிகள்
1.உப்பு நீர் கூந்தலை சீக்கிரமே வெள்ளையாக்கி விடுகிறது.
2. பரம்பரையில் நரைமுடி பிரச்சினை வரும். அதாவது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு நரைமுடி பிரச்சினை இருந்தால் உங்களுக்கும் சீக்கிரமே நரைமுடி பிரச்சினை வர வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
3. தைராய்டு கோளாறுகள்
4. வைட்டமின் குறைபாடுகள்
5. சுத்தம் இன்மை.
6. ஹேர் ஸ்டைலிங் கருவிகளை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |