ராஜநாகம் குஞ்சுகளை எப்படி வளர்க்கும் தெரியுமா? தாய்மையின் உச்சத்தை காட்டும் பாம்பினம்
உலகிலுள்ள பாம்புகளில் அதிகமான விஷத்தன்மை கொண்ட பாம்பினம் தான் ராஜநாகம்.
இது தன்னுடைய விஷத்தால் எதிரியை வீழ்த்தும் தன்மை கொண்டது. அத்துடன் உலகிலேயே கூடுகட்டி முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் பாம்பு இனம் ராஜநாகமாகும்.
ராஜநாகங்கள் குட்டியை இந்த உலகிற்கு கொண்டு வருவதற்கு முன்னர் காய்ந்த இலைகள், குச்சிகளைக் கொண்டு சுமார் ஒரு அடி உயரம் வரை கூடு கட்டும். ஏனெனின்ன முட்டைகளுக்கு சரியான வெப்பநிலையை இது உருவாக்கிக் கொடுக்கும்.
20-40 முட்டைகள் இட்டு அவற்றை மூடி, கூட்டின் மேல் நின்று அல்லது சுற்றி 60-90 நாட்கள் வரை அடைகாக்கும்.
குஞ்சுகளை சாப்பிடுமா?
முட்டைகள் பொரியும் வரை தீவிரமாகப் பாதுகாக்கும். அருகில் யாரேனும் சென்றால் சீறிப் பாய்ந்து விரட்டியடிக்கும். ஆனால் அந்த இடத்தை விட்டு நகராது.
அடைகாக்கும் காலத்தில் உணவு உண்ணாது. மாறாக முழு கவனத்தையும் முட்டைகள் மீதே வைத்திருக்கும். குஞ்சுகள் வெளிவந்ததும் பசியால் தனது குஞ்சுகளையே உண்ணாமல் இருக்க தாய் ராஜநாகம் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும்.
பிறந்த குஞ்சுகள் உடனடியாக அவற்றை பாதுகாத்து, உணவு தேடத் தொடங்கும். ராஜநாகத்தின் இந்த இனப்பெருக்க மற்றும் பாதுகாப்பு முறை, ஊர்வன வகைகளிலேயே தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |