பூமியில் உள்ள ஆறாவது பெரும் கடல் எங்கு இருக்கு தெரியுமா? வியக்க வைத்த விஞ்ஞானிகள்
சர்வதேச விஞ்ஞானிகள் குழு பூமியில் ஆறாவதாக ஒரு கடலைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
பூமியில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன.
அட்லாண்டிக், பசிபிக், இந்திய, ஆர்டிக் மற்றும் அண்டார்க்டிக் பெருங்கடல் என்று நாம் பள்ளியில் படித்திருப்போம்.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று பூமியில் ஆறாவதாக ஒரு கடலைக் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மேற்பரப்புக்கு கீழே உருவான ஒரு அரிய வைரத்தின் பகுப்பாய்வின் போது இந்த ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜெர்மன்-இத்தாலிய-அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பூமியின் உள் அமைப்பு மற்றும் இயக்கவியல் ஆகியவை மேன்டில் டிரான்சிஷன் மண்டலத்திற்கும் கீழ் மேலோட்டத்திற்கும் இடையிலான 660 கிமீ எல்லையால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறது.
இந்த இடத்தில அடர்த்தியான பாறைகள் அமைப்பு ஏதும் இல்லாததால் நீர் சேர்ந்து தங்குகிறது.
இது கடல் நீர் அடுக்குகளுடன் சேர்ந்து, மாற்ற மண்டலத்திற்குள் நுழைகிறது என்ற கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த புதிய கண்டுபிடிப்பு பூமியின் நீர் சுழற்சி பூமியின் உட்புறத்தையும் உள்ளடக்கியது என்பதை வெளிப்படுத்துகிறது
ஆறாவது பெருங்கடல் எங்கே?
பூமியின் மேல் மேன்டில் மற்றும் கீழ் மேன்டில் ஆகியவற்றை பிரிக்கும் எல்லை அடுக்கு, மாற்றம் மண்டலம் (ட்ரான்ஸிசன் சோன்-TZ) என்றழைக்கப்படுகிறது. இந்த அடுக்கில் தான் நீரை ஆதாரம் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இந்த மாற்ற மண்டலத்தின் எல்லை 410 முதல் 660 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.
அங்குள்ள 23,000 வரையிலான அபரிமிதமான அழுத்தம் காரணமாக ஆலிவ்-பச்சை நிற ஆலிவைன் கனிம அதன் படிக அமைப்பில் இருந்து மாறுபடுகிறது. ஆலிவைன் பூமியின் மேல் மேன்டில் 70 சதவீதத்தை கொண்டுள்ளது. இது ‘பெரிடோட்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மாற்றம் மண்டலத்தின் மேல் எல்லையில், சுமார் 410 கிலோமீட்டர் ஆழத்தில், அது அடர்த்தியான வாட்ஸ்லேயிட்டாக(wadsleyite) மாற்றப்படுகிறது. 520 கிலோமீட்டர் தொலைவில் அது இன்னும் அடர்த்தியான ரிங்வுடைட்டாக(ringwoodite) உருமாறுகிறது.