டீ குடிக்காமல் இருந்தால் தலைவலி வருமா? இனி இந்த கவலை உங்களுக்கு இருக்காது..
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் மக்கள் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அனைத்து குடும்பங்களிலும் பிரதான பானமாக விளங்கும் டீயை குடித்தால் பலருக்கும் தலைவலி தீரும் என பலரும் கூறுவார்கள். அதே போன்று தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வரும் என்றும் கூறுவார்கள்.
அப்படி தலைவலி வருவதற்கு என்ன காரணம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் சில டீ வகைகள் உடலுக்கு ஏகப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.
பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே பலரும் விரும்பி குடிக்கிறார்கள். இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவாது. தலைவலி பிரச்சனையுள்ளவர்களுக்கும், தேநீர் அருந்துவதற்கும் என்ன தொடர்பு நிபுணர்கள் செய்த ஆராய்ச்சியில், நீரிழப்பு தலைவலியை தூண்டும். அதே போன்று நீரேற்றத்திற்காக குடிக்கும் தேநீர் வகைகளினால் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.
தலைவலி குறையுமா?
இஞ்சி தட்டிப்போட்டு டீ குடித்தால் ஒற்றைத்தலைவலி குணமாகும். தலைவலி பிரச்சினையுள்ளவர்களுக்கு இஞ்சி டீ நிவாரணியாக செயற்படுகிறது. இஞ்சி உடன் ஏலக்காய் மற்றும் இலவங்க பட்டை போன்ற மசாலா பொருட்கள் சேர்த்து குடித்தால் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாகி, வலி ஏற்படுவது குறையும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
கடந்த 2020-ன் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இஞ்சி ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
மாறாக தேநீரில் உள்ள நறுமணம் தலைவலியை குணப்படுத்தும் என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. தேநீர் தலைவலியை தூண்டும் என சிலர் நினைக்கிறார்கள். அதற்கான காரணம், காபி மற்றும் டீயில் உள்ள பதார்த்தங்கள் தலைவலியை தூண்டும் ஹார்மோன்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் தலைவலி ஏற்படும்.
உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர் அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |