காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்ன?
தூங்கி எழுந்த பின் காலை நேரத்தில் நம் வயிறு காலியாக இருக்கும், அத்தகைய சூழ்நிலையில், நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது.
இது வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.
நார்ச்சத்து உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும், இவை வயிற்று வலி போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்,. சரியான அளவிலேயே எடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும், சிலர் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் நீரிழப்பு பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதன்பின்னர், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்கக்கூடாது.
இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது. அடுத்து, ஆல்கஹால் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது.
இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது.
