புது ஆடை வாங்கினால் ஆடு இலவசம்: எதற்காக இந்த அறிவிப்பு தெரியுமா? புல்லரிக்க வைக்கும் காரணம்
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் என்றால் இலவசங்களுக்கு பஞ்சமிருக்காது.
வாடிக்கையாளரை கவர வேண்டும் என்பற்காக தள்ளுபடி, இலவச பரிசுகளை வழங்குவார்கள்.
ஆனால் இதுவரைக்கும், குக்கர், மிக்ஸி என்ற அறிவிப்புகளை மட்டுமே கேள்விப்பட்டிருப்போம், இங்கு புது ஆடு ஒன்றை பரிசாக அறிவித்திருக்கிறார் நியூ சாரதாஸ் ஜவுளி கடையின் உரிமையாளர்.
சுமார் 17 ஆண்டுகளாக கடை நடத்தி வரும் நியூ சாரதாஸின் உரிமையாளர், ஆட்டுக்கிடாயை பரிசாக அறிவித்திருக்கிறார்.
எதனால் இந்த அறிவிப்பு என்ற கேள்விக்கு, கொரோனாவால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
என்னுடைய கடைக்கு பெரும்பாலும் கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் வருவார்கள், தற்போது பலரும் வேலையிழந்துள்ளதால் சொந்த ஊரிலேயே ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.
அவர்களில் சிலர் ஆடு வளர்ப்பில் கவனம் செலுத்த என்னுடைய அறிவிப்பு உதவியாக இருக்கும் என நினைத்தேன், சிலரது முன்னேற்றத்திற்கு கூட தொடக்கபுள்ளியாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த அறிவிப்பு சுற்றுவட்டாரபகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.