கருஞ்சீரக விதைகளை சாப்பிட்டால் எந்த நோய்கள் குணமாகும்?
ஆயுள்வேதத்தில் மருந்தாக பயன்படும் கருஞ்சீரக விதை சாப்பிட்டால் உடலில் எந்த நோய்கள் குணமாக காரணமாக அமையும் என்பதை பார்க்கலாம்.
கருஞ்சீரக விதை
கருஞ்சீரக விதைகள் பல மருத்துவகுணம் கொண்ட விதைகளாக உள்ளது. இதை மக்கள் சமையலில் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இந்த சிறிய விதைகள் பல நோய்களையும் குணப்படுத்தும் என கூறப்படுகின்றது.
ஆயுர்வேதத்தில், இது நோய்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மக்கள் இதன் ஏராளமான நன்மைகளுக்காக சிலர் அழகுக்குக்காகவும் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் கருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலில் என்னென் நோய்களுக்கு பலன் தரும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

எந்த நோய்களை குணமாக்கும்
நீரிழிவு நோய் - கருஞ்சீரக விதைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. அவை இன்சுலின் சுரப்பு சுரக்கும் அளவிற்கு உடலின் உணர்திறனை அதிகரிக்கின்றன. இது வகை 2 நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது பல நன்மைகளை கொடுக்கும்.
எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு - கருஞ்சீரகம் உடல் பருமனை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. வெதுவெதுப்பான நீர் மற்றும் தேனுடன் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் உடலின் அதிகப்படியான கொழுப்பைக் இது குறைக்கும்.

இதய ஆரோக்கியம் - கருஞ்சீரகம் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இதனால் இதய நோய் வராது.
நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியம் - கருப்பு சீரகத்தை உட்கொள்வது மனதை கூர்மைப்படுத்தவும், செறிவு அதிகரிக்கவும் உதவுகிறது.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு சீரகத்தை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சைமர் போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க என கூறப்படுகின்றது.

ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் - கருஞ்சீரக விதைகளில் உள்ள 'தைமோகுவினோன்' என்ற தனிமம் சுவாசக் குழாயின் வீக்கத்தைக் குறைக்கிறது. இது ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட இருமலில் இருந்து தருமாம்.
சிறிய விதையாக காணப்படும் இந்த கருஞ்சீரக விதையில் இதுபோன்ற பல நன்மைகள் உள்ளது. எனவே இதை சொல்லப்ட்ட முறையில் சாப்பிடுவது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |