நெஞ்சுவலியுடன் காரை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன கே.வி. ஆனந்த்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
இயக்குநர் கே.வி. ஆனந்துக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவரே காரை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன தகவல் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
புகைப்படக் கலைஞராக தன் கெரியரை துவங்கிய கே.வி. ஆனந்த் பின்னர் திரையுலகில் ஒளிப்பதிவாளராக ஆனார். பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக வேலை செய்தார்.

அதன் பிறகு ஸ்ரீகாந்த், ப்ரித்விராஜ், கோபிகா உள்ளிட்டோர் நடித்த கனா கண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வந்த கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
அவருக்கு வயது 54. சென்னை அடையாறில் வசிந்து வந்த அவருக்கு நள்ளிரவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.
இதையடுத்து அவரே காரை ஓட்டிச் சென்று தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.
ஆனால் அங்கு அவர் உயிர் போய்விட்டது. இரண்டு வாரத்தில் கோலிவுட்டில் இரண்டு இழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 17ம் தேதி விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே பலரும் மீளவில்லை.
இந்நிலையில் கே.வி. ஆனந்தும் மாரடைப்பால் இறந்துவிட்டார். கே.வி. ஆனந்துக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நலமாக இருந்திருக்கிறார்.
இந்நிலையில் தான் இந்த திடீர் மரணம் ஏற்பட்டிருக்கிறது. காலையில் எழுந்த உடன் கே.வி. ஆனந்தின் மரணம் குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை நம்பவே முடியவில்லையே. அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த படம் எடுப்பவர்கள் தங்கள் இதயத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
யாராவது ஒரு பிரபலம் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியாவது தொடர்கதையாகி வருகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.