ஆரம்பாகிய செவ்வாய் பெயர்ச்சி! வரும் 15 நாட்கள் பேரதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள்
ஜோதிடத்தின் பார்வையில், இந்த மாதத்தில் நிகழும் செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் சுப மற்றும் அசுப பலன்கள் 12 ராசிகளிலும் இருக்கும்.
அதன்படி, செவ்வாய் கிரகம் அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 30 ஆம் தேதி வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் அவர், பின்னர் வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார்.
இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்:
இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி, தொழில் செய்பவர்களுக்கும், வெளிநாட்டு தொடர்பு இருப்பவர்களுக்கும் இது சாதகமான காலமாக இருக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். இக்காலத்தில் நீங்கள் நற்செய்திகளையும் பெறுவீர்கள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் தங்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும்.
வாகனம், சொத்து வாங்க இதுவே சிறந்த நேரம் ஆகும். போட்டித் தேர்வில் வெற்றி நிச்சயம். பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.
கும்பம்:
கும்ப ராசியில் இன்று நிகழும் செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மாணவர்கள் கல்வியில் சிறந்த அனுபவத்தை பெறுவார்கள். இந்த நேரத்தில், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.