விஜய் வறுமை பற்றி எனக்கு தெரியும்! படு வைரலாகும் நண்பனின் பதிவு
தற்போது நடிகராக இருந்து முதல்வராக பதவி ஏற்றிறிருக்கும் விஜய் பற்றி அவர் நண்பன் கூறிய தகவல் வைரலாகி வருகின்றது.

முதல்வர் விஜய்
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனிக்கட்சியாக வெற்றிபெற்றது. கட்சி வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் விஜய் பதவியேற்க நான்கு நாட்கள் கடந்தது.
இதன் பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்ததால் கட்சியின் பலம் 120 ஆக உயர்ந்து மே10 விஜய் முதல்வராக பதவியேற்றார்.

இவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்வு சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பதவி ஏற்றதன் பின் மேடையில் மக்களுக்கு விஜய் உரையாற்றினார்.
அவர் பேசும் போது “எப்படித் தொடங்குவது எனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான்.
வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும். மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை”. என பேசி இருந்தார். இந்த நிலையில் விஜய்யின் நண்பர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

நண்பனின் பதிவு
நண்பன் வெளியிட்டுள்ள பதிவில், “விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஆற்றிய தனது முதல் உரையில், தான் வறுமையில் வளர்ந்ததாகவும், பசி என்றால் என்னவென்று கூட தனக்குத் தெரியும் என்றும் கூறினார்.
இது பொய். ஏனென்றால் நான் அவருடன் லயோலா பள்ளியில் 3-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தேன்.வகுப்புத் தோழனாக இருந்தேன். விஜயின் தந்தை திரைப்பட இயக்குநர்.

அவர் தன் மகனுக்குத் திரைப்படத் துறையில் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்தார். பெரும்பாலான திரைப்பட இயக்குநர்களைப் போலவே அவரது தந்தையும் பொருளாதார நெருக்கடிக் காலங்களைச் சந்தித்திருக்கலாம்.
ஆனால் அது வறுமைக்குச் சமமானதல்ல.வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள், பணமில்லாமல் இருப்பதையும் வறுமையையும் குழப்பிக் கொள்கிறார்கள்.

இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை.” என அவர் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகளை இந்த பதிவை இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.