வெயில் காலத்தில் நீரழிவு நோயாளிகளே! இந்த தவறுகள் மட்டும் செய்யாதீங்க
கோடை காலத்தில் சக்கரை நோயாளிகள் சில விடயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சக்கரை நோயாளிகள்
தற்போது நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீரிழிவு நோய் வந்துவிட்டால் மருந்துகளை காட்டிலும் நோயாளிகள் அவர்களின் வாழ்க்கை முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தினமும் சாப்பிடும் உணவு மதல் குடிக்கும் பானம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் தற்போது வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால் நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
அவர்கள் இந்த நேரத்தில் ஒரு சில விடயங்களை செய்ய கூடாது. அந்த விடயங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

எவற்றை செய்ய கூடாது?
நீரிழிவு நோயாளிகளுக்கு சருமத்தில் உணர்திறன் குறைவாக இருக்கும். இது மிகவும் ஆபத்தான விடயம். இது வெயில் காலத்தில் அவர்களுக்கு பல ஆபத்துக்களை கொடுக்கலாம்.
இந்த நேரத்தில் இவர்கள் தரையில் நடந்து செல்லும் போது அவர்களுக்கு கால் சுடுவது உணர முடியாது. இதனால் காலில் காயங்கள் ஏற்படும்.
பொதுவாக நீரிழிவு நோயாளர்களுக்கு புண் ஆறுவது மிகவும் கடினம். எனவே வெயில் காலங்களில் கால்களை பாதுகாக்கும் வகையில் பாத அணிகளை போட்டு செல்வது அவசியம்.
அடுத்து மிகவும் முக்கியமான ஒரு விடயம். நீங்கள் உங்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் பேலியோ, கீடோ, கலோரி குறைப்பு டயட் என உங்களுக்கு எது ஏற்றதோ அதை தேர்ந்து எடுத்து பின்பற்றுவது நல்லது.

இதை தவிர இண்டர்மிண்டண்ட் ஃபாஸ்டிங் கூட இருக்கலாம். இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting - IF) என்பது உண்ணாவிரதம் இருக்கும் நேரத்திற்கும், உணவு உண்ணும் நேரத்திற்கும் இடையே சுழற்சி செய்யும் ஒரு உணவு முறை ஆகும்.
இந்த நேரத்தில் அன்றாடம் நடைப்பயிற்சி செய்வதும், வலிமைக்கான உடற்பயிற்சிகள் செய்வதும் மிக மிக அவசியம்.
இது இன்சுலின் அமைப்பை பராமரிக்கும். இதில் மிக முக்கியமாக வெயில் நேரத்தில் உடற்பயிற்ச்சி செய்ய கூடாது.
இந்த கால கட்டத்தில் தாகம் எடுக்காவிட்டாலும் கூட, கோடை நேரம் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதற்கு காரணம் உடலில் நீர்ச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு குறையும் போது அது ரத்ததில் சக்கரையாக கலக்கும். எனவே மிகவும் கவனம் தேவை.
ஒருவேளை தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லை என்று தாகம் எடுக்கும்போதெல்லாம் கடைகளில் விற்கும் சோடா மற்றும் பழச்சாறு போன்றவற்றை வாங்கி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் இவை ரத்தச் சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தும். உங்களுக்கு வெயில் காலத்தில் பசி எடுக்கும் போதெல்லாம் புரதச்சத்து மிக்க ஹெல்த்தி ஸ்நாக்ஸ், பழங்கள், சாலட் போன்றவற்றை சாப்பிடவும்.
இதுபோன்ற விடயங்கள் நீரிழிவு நோயாளிகள் செய்து வெயில் காலத்தில் உங்கள் ரத்த சக்கரையை கட்டுக்குள் வையுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |