சர்க்கரை நோயாளிகள் தயவு செய்து இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்....!
சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ' உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதைக் கடைப்பிடித்தாலே போதும்" வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்கும்.
சில உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டியது அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆக்ரோஷமான ஆற்றை அமைதிப்படுத்திய புத்தர் சிலை…வெளிவரும் மர்மம்!
துரித உணவு
நீரிழிவு நோயாளிகள் துரித உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். இதில் பீட்டா கரோட்டின் , கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் அளவும் அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். எனவே, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது.
பச்சை பட்டாணி
இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் நீரிழிவு நோயாளிகள் பச்சைப் பட்டாணியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளது.
எருமைகளிடம் சிங்கிளாக சிக்கிய சிங்கம்
சோளம்
நீரிழிவு நோயாளிகள் சோளத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது.