விவாகரத்துக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ்- ஐஸ்வர்யா.. இதுக்கெல்லாம் காரணம் மகனா?
விவாகரத்து செய்து பிரிந்த பின்னரும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகள் ஒன்றாக இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் சுமார் 18 வருடங்களை நிறைவு செய்துள்ளனர்.
இருந்த போதிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். ஆனால் இதற்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.
மாறாக மகன்கள் தொடர்பான விழாக்களில் மட்டும் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடியாக கலந்து கொண்டு வருகிறார்கள்.
மீண்டும் இணைந்த அடுத்த தம்பதி
இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் சட்டப்படி விவாகரத்து வாங்கி பிரிந்தனர். இவர்கள் இனி சேரப்போவது இல்லை என பலரும் கூறிய வந்த வேளையில், தற்போது அனைவருக்கும் அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் தங்கள் மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் இருக்கும் அமெரிக்கன் இன்டர்நேஷ்னல் ஸ்கூலில் தான் தனது பள்ளி படிப்பை யாத்ரா முடித்து இருக்கிறார்.
அவர்கள் ஒன்றாக மகன் யாத்ராவை கட்டியணைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களும் “ஜிவி பிரகாஷ்- சைந்தவி போன்று வாழ்கிறார்களா?” என இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

