தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு... மகன் சொன்ன பதிலைக்கேட்டு ஆடிப்போன குடும்பம்!
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். வெளியுலகத்திற்கே இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் குடும்பத்திற்குள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே பல நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. பல பிரச்சினைகள் உலா வந்து கொண்டிருக்க, அவர்களின் மகன்களிடம், அம்மா, அப்பா விவாகரத்துக்குப் பிறகு யாருடன் வாழ விரும்புகிறீர்கள் என்று ரஜினி கேட்டாராம்.
அதற்கு யாத்ராவோ, எனக்கு இரண்டு பேருமே வேண்டும். நான் ஒருவருடன் மட்டும் இருக்க விரும்பவில்லை. அதற்கு, இதே கேள்வியை தனுஷ் மற்றும், ஐஸ்வர்யாவிடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்களோ?, அது தான் எனது பதில் என்று பதிலளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளாராம் மகன் யாத்ரா.
மகன் சொன்ன பதிலைக் கேட்டு மகன்களுக்காக அவர்கள் தங்கள் முடிவை பரிசீலனை செய்வார்கள் என கூறப்படுகிறது.