தனுஷின் விவாகரத்து குறித்து தந்தை கஸ்தூரி ராஜா! கோபத்தில் என்ன சொன்னார் தெரியுமா?
தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜாவிடம், பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் கோபத்தில் அவர் கூறிய பதில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனுஷ் ஐஸ்வர்யா
நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதுடன், இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இவர்களது காதல் வாழ்க்கை 18 ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இருவதும் விவாகரத்து செய்து பிரிவதாக வெளியிட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குடும்பத்தினர் சமாதானம் செய்தும் ஏற்றுக்கொள்ளாத இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ் தந்தை அளித்த பதில்
இவர்கள் இருவரும் பிரிந்த தருணத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இதுவெறும் குடும்ப பிரச்சினை என்றும், மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அது தற்போது வரை நடக்கவில்லை.
பின்பு பெரியளவில் பேட்டிகள் எதுவும் அளிக்காமல் இருந்து வந்த தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா, சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார். அந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர் தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த கஸ்தூரி ராஜா, இது சம்பந்தம் இல்லாத கேள்வி, என்னிடம் இதை நீங்க கேட்கக்கூடாது. இதற்காக தான் நான் மீடியாவை சந்திக்காமல் இருந்து வந்தேன்.
அத்துமீறி கேள்வி கேட்குறீங்க என அந்த பத்திரிகையாளரை பார்த்து சற்று கோபமாக பேசினார். பின்னர் உடனிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றுள்ளனர்.