திருமணத்திற்கு விருப்பமில்லை... கண்டுகொள்ளாத பெற்றோர்! இளம்பெண் கொடுத்த பாரிய ஷாக்
வேலூர் சத்துவாச்சாரியில் திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெங்களூரு ஜெயநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பரிமளா (24) தனியார் நிறுவனததில் வேலை செய்து வந்துள்ளார். தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிடவே அவரது தாய் கல்யாணி குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் இளம்பெண் பரிமளாவுக்கும், காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் திருமணம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே பரிமளாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து குடும்பத்தினரிடமும் அவர் தெரிவித்த நிலையில், அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்கும்படி கோரியுள்ளனர்.
இந்நிலையில் திருமண ஏற்பாடுகளை செய்வதற்கு தொடங்கிய போது பரிமளா ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். அவரின் பேச்சை, குடும்பத்தினர் பொருட்படுத்தாததால், விரக்தியடைந்த பரிமளா நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டுள்ளார்.
பின்பு பரிமளாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு, மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.