புதருக்குள் மறைந்திருந்த சொகுசு கார்! இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த டாக்டர்- விசாரணையில் தெரியவந்த உண்மை
சென்னையில் திமுக எம்பி பெயரில் போலி பாஸ் வைத்துக் கொண்டு இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த பல் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ரேடியல் சாலை அருகே இளம்பெண்கள், திருநங்கைகள் தகாத தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது அங்கே சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
காரில் இளம்பெண்ணுடன் இளைஞர் ஒருவர் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார், போலீசாரை பார்த்ததும் இளம்பெண் பைக்கில் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் திமுக எம்பி ஒருவருக்கு சொந்தக்காரர் எனவும், அவரின் பெயரில் இ பாஸ் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து குறித்த இளைஞரை விடுவித்த போலீசார், எம்பி-யை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
அதற்கு அவர், தான் அதுபோல் யாருக்கும் கார் பாஸ் தரவில்லை என கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர், போலியான பாசை வைத்து காரில் தப்பிச் சென்ற வாலிபர் குறித்து விசாரித்தார்.
விசாரணையில் அவர், மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சேர்ந்த ஷியாம் கண்ணன் (வயது 27) என்பதும், பல் டாக்டர் என்பதும் தெரியவந்தது.
ராஜகோபாலன் என்பவரிடம் இருந்து எம்.பி. பாசை வாங்கியதாகவும், ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் எம்.பி. பாஸ் வைத்திருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஷியாம் கண்ணன் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தி.மு.க. எம்.பி.யின் அனுமதி இல்லாமல் போலியாக பாஸ் எப்படி தயாரிக்கப்பட்டது?. இதில் தொடர்புடைய நபர்கள் யார்? பாஸ் வழங்கிய ராஜகோபாலன் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.